கூடுதலாக மது குடிக்க கேட்ட நபரை கொன்று புதைத்த சக நண்பர்கள்; கோவை அருகே பரபரப்பு சம்பவம்!
கோயம்புத்தூர்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை, 3 நண்பர்கள் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூலூர் அருகே காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். மதுரையை சேர்ந்த இவர், சூலூர் காங்கயம்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காங்கேயம்பாளையம் பகுதியில் நேற்று மாலை நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது , மது வாங்க பணம் கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில், குடிபோதையில் இருந்த அவரது நண்பர்கள் ரகுபதி வயது 24, முத்துகிருஷ்ணன் வயது 24, கரண் வயது 23 ஆகியோர் சுரேசை மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் சுரேஷ் கழுத்தில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து குடிபோதையில் இருந்த 3 பேரும் சுரேஷின் உடலை அங்கேயே எரித்து புதைத்துள்ளனர். மதுபோதையில் சுரேஷை கொலை செய்த அவரது 3 நண்பர்கள், இன்று பிற்பகல் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்து கொலை சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு ச...