நண்பர்களுக்குள் மது குடிக்கும்போது ஏற்ப்பட்ட வாய் தகராறு; ரௌடியை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டையில் பெயின்டரான சுரேஷ் என்பவருக்கு இரவு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ், அவரது நண்பரான பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரௌடி சந்தோஷ் குமார், மற்றொரு சந்தோஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனனர். அப்பொழுது, எல்லோருக்கும் மது விருந்து நடந்துள்ளது . அதில், சந்தோஷ் குமாருக்கும், பிரகாஷூக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு மது போதையில் இருந்ததால் பீர் பாட்டிலால் பிரகாஷை, சந்தோஷ் குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. சந்தோஷ் குமார் தாக்கியதில் பிரகாஷூக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே, அவருக்கு முதலுதவி சிகிச்சை முடிந்தவுடன் அவர் வீடு திரும்பிஇருக்கிறார். ஆனால், கோபத்துடன் இருந்த பிரகாஷ், கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள குழந்தை இயேசு பள்ளியில் அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை, தனது நண்பர்களுடன் இணைந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பிரகாஷை மடக்கிப பிடித...