Posts

Showing posts with the label மது அருந்தியிருக்கிறார்கள்

மூன்று கொலை, மூன்று பேர் கைது சென்னையில் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விபரீதம்

Image
சென்னை அடையாறு இந்திரா நகர், 1வது அவென்யூவில் உள்ள பைக் ஷோரூம் அருகில் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதாக அடையாறு போலீஸாருக்கு கடந்த 26-ம் தேதி தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சாக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தபோது அதில் தலையில் வெட்டு காயங்களுடன் இளைஞரின் சடலம் இருந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், பீகார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டம், பத்தியாபரைச் சேர்ந்த கௌரவ்குமார் என்று தெரியவந்தது. மேலும், அவர் வேலைத் தேடி தன்னுடைய மனைவி முனிதா, 2 வயது மகனுடன் சென்னைக்கு வந்த தகவலும் கிடைத்தது. இதையடுத்து கௌரவ்குமாரை கொலை செய்தது யாரென்று விசாரித்தபோது பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், அலிப்பூரைச் சேர்ந்த சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார் (30) எனத் தெரியவந்தது. இவர், கோட்டூர்புரத்திலுள்ள Institute of Chemical Technology கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை செய்வது தெரிந்தது. உடனடியாக சத்யேந்தரைப் பிடித்து விசாரித்தபோது கௌர...